Wednesday, March 16, 2016

​​5. கல்வெட்டில்​ ஓர் ​​இசைப்பாடம்




சில நேரங்களில் ஆர்வக் கோளாறு என்று சொல்வோமே.. அது எனக்கு அடிக்கடி ஏற்படுவதுண்டு. ஏதாவது ஒரு நூலில் தமிழர் வரலாறு தொடர்பான ஒரு தகவலை வாசித்து விட்டால் உடன் அங்கே சென்று அதனை நேரில் பார்த்து அதனை வீடீயோ பதிவாக்கியும் புகைப்படப் பதிவாக்கியும், ஏனைய நூல்களை வாசித்து அது பற்றிய தகவல்களைத் திரட்டி அதனைப் பற்றிய விரிவான செய்தியை
​த்​
 தமிழ் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்
​ற 
​உணர்வும்
 தோன்றும். இது அவ்வப்போது நிகழ்ந்தால் பரவாயில்லை. அடிக்கடி நிகழ்வதால் தானே தொல்லையே.. ஏனென்றால் நான் நேரில் சென்று களப்பணி செய்து  அது பற்றி தகவல் தேடி பதிய வேண்டும் என நினைக்கும் வரலாற்று இடங்களின் பட்டியல் நீண்டு கொண்
​டே
 செல்கின்றதே தவிர குறையவில்லை. சரி. இந்தவாரமும் தமிழ் மரபு அறக்கட்டளை நேரடி களப்பணியாற்றி பதிவு செய்து தகவல் தேடி பதிப்பித்து வெளியிட்டிருக்கும் ஒரு செய்தியைப் பற்றித்தான் வரலாற்றுப் பிரியர்களுடன் நான் பகிர்ந்து கொள்ளப் போகின்றேன். 

தமிழகத்தில் இதுவரை கண்டுபிடித்துப் பதிவு செய்யப்பட்டிருக்கும் கல்வெட்டுக்களில்
​,​
 இசையை
​குறிக்கும் 
மிகப் பழமையானதொரு கல்வெட்டு ஒன்றினைப் பற்றி
​ய தகவலை ​
 தொல்லியல் ஆய்வறிஞர் திரு.நடனகாசிநாதனின் கல்வெட்டுக்கலை நூ
​ல்
 2011ம் ஆண்
​டு வாங்கியபோது அதனை 
 வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் பட்டியலிடப்பட்டிருக்கும் ஏராளமான கல்வெட்டுக்களில் இசைக்கல்வெட்டு ப
​ற்
றிய ஒரு குறிப்பினைப் பார்த்தபோது அதன் மேல் ஆர்வம் எழ, அந்தக் கல்வெட்டு இருக்கும் பகுதிக்குச் சென்று பார்க்க ஆவல் எழுந்தது. இந்த இசைக் கல்வெட்டு இருப்பது அறச்சலூர் என்னும் ஒரு சிற்றூரில். இந்தச் சிற்றூர் ஈரோட்டிலிருந்து காங்கேயம் செல்லும் சாலையில் இருக்கின்றது. எனது தமிழகத்துக்கான
​ப்​
  பயணங்களில் ஈரோடு செல்லும் போது அறச்சலூர் செல்ல வேண்டும் . இக்கல்வெட்டுப் பதிவைச்  செய்ய வேண்டும்  என்று முயன்றும் அடுத்தடுத்த ஆண்டுகளில் நான் மேற்கொண்ட பயணங்களில் இது சாத்தியப்படவில்லை. ஆனால் இந்த முறை கண்டிப்பாக இந்த அறச்சலூர் கல்வெட்டுப் பதிவை செய்து விடவேண்டும் என முடிவெடுத்து எனது ஈரோட்டுக்கான பயணத்திற்கான திட்டப்பட்டியலில் அதனை பதிந்து வைத்திருந்தேன்.

தமிழக தொல்லியல் துறையில் பணியாற்றியவரும் பல ஆண்டுகளாக வரலாற்று ஆய்வுகளை மேற்கொண்டு
​ ​
வருபவருமான திரு.எஸ் ராமச்சந்திரன் அவர்களைத் தொடர்பு கொண்டு இந்தக் கல்வெட்டு இருக்கும் பகுதி, அங்குச் செல்லும் வழி ஆகியனபற்றி நான் விசாரித்த போது அங்கே ஈரோட்டுக்கு சற்றருகே உள்ள ஒரு ஊரில் இருக்கும் தோழர் சிவப்பிரகாசம் என்பவரைப் பற்றி எனக்குச் சொல்லி
​'​
அவருக்கு இங்கு செல்லும் இடம் நன்கு தெரியும். அவருடன் செல்வது சிறப்பு
​' ​
 எனச் சொல்லி அவரது தொடர்பினையும் ஏற்படுத்திக் கொடுத்தார்.  தோழர் சிவப்பிரகாசத்தை நான் சென்னையிலிருந்தே தொடர்பு கொண்டு பேசி நான் வரும் தேதி நேரம் ஆகியன பற்றி சொல்லி அவரது பணிகளுக்கிடையில் இங்கே வந்து எனக்கு உதவ வாய்ப்பிருக்குமா என்றும் கேட்டு அறிந்து கொண்டேன். 

இந்த ஆண்டு ஜனவரி 2ம் நாள் நான் ஈரோடு சென்ற முதல் நாளில் குலதெய்வ வழிபாடுகள், சித்தர்கள் தொடர்பான கோயில்கள் பற்றிய பதிவுகள் என செய்து மறு நாள் 3ம் தேதி காலையில் அறச்சலூர் செல்வதாக என் திட்டம் இருந்தது. காலையில் 6 மணி அளவில் நான் தங்கியி
​ருந்த
 குமாரபாளையத்திலிருந்து புறப்பட்
டு
 ஈரோடு வந்த போது மணி
​காலை ​
ஏழாகியிருந்தது. அங்கே தோழர் சிவப்பிரகாசத்தைச் சந்தித்து அவருடன் அறிமுகமாகிக்கொண்டபின் நான் வந்த  வாகனத்திலேயே அறச்சலூர் நோக்கி பயணித்தோம். தோழர் சிவப்பிரகாசம் கொங்கு மண்டல வரலாற்றை மிக விரிவாக விளக்கிக் கொண்டே
​ ​
வந்தார். தொடர்ச்சியாக  அவர் தனது ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றார் என்பதுவும் கொங்குச் சோழர்கள் பற்றி பல தகவல்களைத் திரட்டி வைத்திருக்கின்றார் என்பதையும் அவருடன் பேசிக் கொண்டு வந்தபோது அறிந்து கொண்டேன்.

எறக்குறைய முப்பத்தைந்து நிமிடங்களில் அறச்சலூர் கிராமம் வந்து சேர்ந்தோம். இங்கு
​வரலாற்றுச்
 சிறப்பு
​ கொண்ட 
சின்னம் ஒன்று இருக்கின்றது என்பதற்கு அடையாளமாக எந்த ஒரு அறிவிப்புப் பலகையையும் அங்கு காணவில்லை. தோழர் சிவப்பிரகாசத்திற்கு வழி தெரியுமாகையால் நாங்கள் கிராமத்திற்குள் தொடர்ந்து பயணித்து மலைக்குன்று இருக்கும் ஒரு பகுதிக்கு வந்து இனிமேல் வாகனம் செல்ல முடியாது எனத்தெரிந்ததும் வாகனத்தை
​நி
றுத்தி விட்டு குன்று
​இருக்கும் ​
பகுதிக்கு நடக்க ஆரம்பித்தோம். சற்று தூரத்தில் தென்பட்ட பாறைப்பகுதியில் இருக்கும் குகையில் தான் அறச்சலூர் இசைக்கல்வெட்டு இருகின்றது எனத் தோழர் சொல்லிக் கொண்டே
​வர ​
குன்
​றை​
 நோக்கி நடந்தோம். இந்த அறச்சலூர் இசைக் கல்வெட்டு என்பது
​ ​
கிமு.2ம் நூ
​ற்
றாண்டு வாக்கில்,
​ ​
அதாவது இன்றைக்கு ஏறக்குறையை 2300 ஆண்டுகள் எனச் சொல்லக்கூடிய பழமை வாய்
​ந்த 
ஒரு கல்வெட்டு. இந்தக் கல்வெட்டு இன்று நாம் அறிந்திருக்கும் தமிழ் எழுத்துருக்கு
​மி​
க மிக முந்தையதான தமிழி எழுத்துருவில் அமைந்த ஒரு கல்வெட்டு. இந்தத் தமிழி எழுத்துருக்கள் படிப்படியாக வட்டெழுத்துக்களாகவும் தமிழ் எழுத்துக்களாகவும் அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் பரிணாமமுற்றன.  இந்த
​அறச்சலூர் ​
இசைக்கல்வெட்டு என்பது பண்டைய தமிழி எழுத்துரு சற்றே மாற்றம் கொண்டு வட்டெழுத்தாக பரிணாம மாற்றம் பெறுவதைக் காட்டும் வகையில் இருக்கும் ஒரு சிறந்த கல்வெட்டுச் சான்று என்று கல்வெட்டு ஆய்வாளர்களால் குறிப்பிடப்படுவது.

ஆக, இத்துணைச் சிறப்பு பெற்ற இந்தக் கல்வெட்டை பார்க்கப் போகின்றோம் என்
​ற
 ஆவல் மனதில் நி
​றை
ந்திருந்தது. வயல் வெளிப்பகுதியை
​த்​
 தாண்டி கருவேல மரங்கள் நிறைந்த காட்டுப்பகுதிக்குச் செல்ல ஆரம்பித்தோம். அங்கே பாதையைத் தேடியும் பாதை தென்படவில்லை. தோழர் சிவப்பிரகாசம் இங்கே ஏற்கனவே சில முறை வந்திருந்து இக்கல்வெட்டுக்களைப் பார்வையிட்டவர் என்பதால் அவருக்கு இக்கல்வெட்டு இருக்கும் பாதைக்குச் செல்லும் வழி தெரியும். ஆயினும் கூட எளிதில் பாதையைக் கண்டு பிடிக்க முடியவில்லை. பரந்து விரிந்த உறுதியான பாறைகளின் மேல் ஏறி
​மேலே
 சென்று கொண்டேயிருக்கின்றோம். எங்கும் அந்தக் குறிப்பிட்ட பாறையைக் காணவில்லை. நடந்து நடந்து வந்ததில்
​ சற்று​
 தூரம் காட்டிற்குள் வந்து விட்டோம் என்பதை அறிந்த போது மனதில் ஒரு வி
​த 
திடீர் திகில் உணர்வு எழ ஆரம்பித்தது. எ
​ங்க
ள் இருவருடன் வாகனமோட்டியும் வந்திருந்தார் .ஆக மூவருமாகத் தேடித்தேடிப் பார்த்தும் அக்குறிப்பிட்ட பாறைக்குச் செல்லும் பாதை தென்படவில்லை. மனம் அலுத்துப் போகும் வேளையில் மீண்டும் திரும்பி வந்து வேறொரு பகுதியில் சென்று பார்த்து தேட முயற்சிக்கையில் அந்தப்பாறைக்குச் செல்லும் வழி தென்பட்டது.  மூவரும் அப்பகுதிக்கு விரைந்தோம். 

அப்பகுதியில் முன்னே சி
​தைந்த

​ஓரிரண்டு 
 சமணர் படுக்கைகளும் இருக்கின்றன. இசைக்கல்வெட்டு இருக்கும் குகைப்பகுதிக்கு வந்
​து 
சேர்ந்தோம். அங்கே
​, ​
 ஐந்து வரிகளில்
​, ​
 ஐந்து அடுக்குகளாக இந்த இசைக்கல்வெட்டு
​ ​
வெட்டப்பட்டிருப்பதைக் காண முடிந்தது. அதில் உள்ள வாசகங்கள் (இக்காலத் தமிழ் எழுத்துருவடிவில்) 

த  தை  தா  தை   த
தை  தா  தே  தா  தை
தா  தே  தை  தே  தா
தை  தா  தே  தா  தை
த  தை  தா  தை   த

இந்தக் கல்வெட்டின் அருகிலேயே இந்தக் கல்வெட்டினை அமைத்தவர் பெயரும் அழகிய தமிழி எழுத்துருவிலேயே வழங்கப்பட்டிருப்பதைக் காணமுடிந்தது. அதில், 
எழுத்தும் புணருத்தான் மணிய்
வண்ணக்கன் தேவன் சாத்தன்

அதாவது, மணிவண்ணக்கனாகிய, அதாவது காசு பரிசோதகராகிய தேவன் சாத்தன்  என்பவர் இக்கல்வெட்டினை
​ச்​
 செதுக்கியவர் என்ற குறிப்பாக இது அமைந்துள்ளது.

இன்றைக்கு 2300 ஆண்டுகளுக்கு முந்தைய இந்த இசைக்கல்வெட்டும் அதன் எழுத்து ஒழுங்கு நயமும் பார்க்கும் போது அதிசயிக்கத்தக்க வகையில் அமைந்திரு
​க்கின்றது
.  இந்தக் கல்வெட்டு
​ இருக்கும் பகுதியையௌம் அது பற்றிய விரிவான ஆய்வுச் செய்தியையும்

​தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில் இங்கே
இணையம் வழியாகப் பார்த்து
​ப்​
 பயனுறலாம்
​. ​

தமிழர் வரலாற்றில் முக்கியத்துவம்  வாய்ந்த செய்திகளைச் சொல்லும் கல்வெட்டுக்களின் வரிசையில் இந்த இசைக்கல்வெட்டும் இடம் பெறுகின்றது. தமிழ் இசை என்பது தமிழ் நிலப்பகுதியில் தமிழரால் வளர்க்கப்பட்டது என்பதை உறுதி செய்ய இவ்வகைக் கல்வெட்டுக்கள் வலுவான சான்றுகளாக அமைகின்றன.  ஆனால் இத்தகைய கல்வெட்டு
​க்கள்​
 இருப்பதைப் பற்றியும் இதன் சிறப்புக்களைப் பற்றியும் எத்தனை
​ ​
பேர் அறிந்தவர்களாக இருக்கின்றோம்
​ என்பது முக்கியக் கேள்வி அல்லவா​
? சரி
​,​
 பொதுமக்களுக்குத் தகவல் தெரியவில்லையென்றாலும் கூட கல்விக்கூடங்களி
​ல்​
 பணிபுரிபவர்களில் எத்த்னை பேர் இத்தகைய விடயங்களில் ஆர்வம் காட்டுவோராக இருக்கின்
​றார்கள்
 என்பதை என்ணிப்பார்க்கும் போது ஆதங்கமே மேலிடுகின்றது.

தமிழகத்தில் காணும் போது இந்தக் கல்வெட்டு இருக்கும் பகுதி தூய்மையாக பாதுகாக்கப்படாமல் இருப்பதுவும் இங்கே செல்வதற்கான வழி கூட சரியாக அமைக்கப்படாது இருப்பது என்பது வருத்தத்திற்குறியதாகவே இருக்கின்றது. அதே வேளை தமிழகம் கடந்த தமிழர் வாழும் நாடுகளில் இவ்வகைக் கல்வெட்டுக்கள், அவற்றின் சிறப்புக்கள் என்பன பற்றி பேசுவோர் யாரும் இல்லாததும் ஒரு குறையாகவே காண்கின்றேன். தமிழர் பெருமை பற்றி பேசுவோர் மிக முக்கியமாக இவ்வகைச் ஆதாரச் சான்றுகளைப் பற்றி அறிந்து கொள்ள வேண்
​டி
யது மிக அவசியமான ஒன்றாக
​க் கருதுகின்றேன்
. அறிந்து கொள்வது மட்டுமன்றி இவ்வகைக் கல்வெட்டுக்கள் சேதப்படாமல் பாதுகாக்க முயற்சி எடுப்பதும் காலத்தின் அவசியம். வெறுமனே கல்தோன்றி முன் தோன்றா
​காலத்து ​
மூத்த குடி எ
​மது தமிழ்க்
குடி எனச் சொல்லிப் பெறுமை பேசுவ
​தௌ மட்டும்
 விடுத்து ஆக்கப்பூர்வமான ஆய்வுப்பணிகளிலும் வாசிப்புமுயற்சிகளிலும் உண்மையான தமிழ் ஆர்வலர்கள் ஆர்வம் காட்ட வேண்டும் என்பதையே தமிழ் மரபு அறக்கட்டளை விரும்புகின்றது. அதுவே உண்மையான தமிழ்ப்பணியாக
​வும்​
 அமையும்!

2 comments:

  1. உங்களின் அக்கறை, ஆர்வம்,உழைப்பு ஆகியவைகளுக்கு என் நன்றி கலந்த வணக்கம் 🙏 ❤️.
    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  2. உங்கள் மொழி பற்று பாராட்டுக்குரியது.தமிழ் இசைக் கல்வெட்டு மீட்டுருவாக்கம் பங்கில் உங்கள் முயற்சி அதிக பங்கு உள்ளது. உங்கள் தமிழ் ஆர்வம் தமிழ் சமூகத்திற்கு பெருமைக்கு வித்தாகட்டும்.

    ReplyDelete